» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி - மும்பை இடையே நேரடி விமான சேவை: நவி மும்பை விமான நிலைய அதிகாரியிடம் மனு!
சனி 7, பிப்ரவரி 2026 11:23:06 AM (IST)

தூத்துக்குடி - மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று நவி மும்பை விமான நிலைய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடியையும், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையையும் இணைக்கும் வகையில் நேரடி விமான சேவையைத் தொடங்க வலியுறுத்தி, மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முனைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி விமான நிலையம் தற்போது சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 3,115 மீட்டர் நீளமுள்ள புதிய ஓடுதளம் (Runway) மற்றும் அதிநவீன பயணிகள் முனையம் ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ள சூழலில், பெரிய ரக ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக வசதிகள் உள்ளன.
"தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். அவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான நேரடி விமான சேவையைத் தொடங்கினால், பயண நேரம் குறையும் என்பதோடு வர்த்தக ரீதியாகவும் இரு நகரங்களும் பெரும் பலன் பெறும். குறிப்பாக நவி மும்பை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்போது, தூத்துக்குடிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்," என ஸ்ரீதர் தமிழன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
BabuFeb 7, 2026 - 03:45:00 PM | Posted IP 172.7*****
ama ivar atha vanki yena panuvar airport staff kita manu kuduthuta flight varuma apo puthusa tran vida railway station master ta manu kudukalame
மேலும் தொடரும் செய்திகள்

விஜய்- திரிஷா குறித்து அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கண்டனம்!
சனி 14, பிப்ரவரி 2026 12:53:03 PM (IST)

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்
சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)

விருப்ப மனு சமர்ப்பிக்க பிப்.20-ம் தேதி வரை கால அவகாசம் நீடிப்பு : தவெக அறிவிப்பு
சனி 14, பிப்ரவரி 2026 12:26:53 PM (IST)

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு குளறுபடி: சார்புச் செயலாளர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சனி 14, பிப்ரவரி 2026 12:08:03 PM (IST)

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)


LatamuruganFeb 7, 2026 - 09:10:28 PM | Posted IP 172.7*****