» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் தேர்தல் பொதுக் கூட்டம்: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

வியாழன் 5, பிப்ரவரி 2026 12:04:01 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்துள்ள அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரசாரத்தை தொடக்கிவைத்தார்.

அப்போது முதலில் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர், மதுராந்தகத்துக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இந்த நிலையில், வருகின்ற 28-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory