» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி

திங்கள் 22, டிசம்பர் 2025 8:10:14 AM (IST)

மத்திய அரசின் திட்டங்ளுக்கு ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று நெல்லை தச்சநல்லூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, மதச்சார்பின்மை மற்றும் மகாத்மா காந்தி குறித்து பேசினார். உண்மையில் அவர் மதச்சார்பின்மையை கடைபிடிப்பதில்லை. கிறிஸ்துமஸ் விழாவிற்கு வாழ்த்து சொல்லும் முதல்-அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை புறக்கணிக்கும் இவருக்கு மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பேசத் தகுதியில்லை. தி.மு.க. எதிர்கட்சியாக இருந்த போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, அதில் பல குளறுபடிகளை செய்து திட்டத்தையே நிறுத்தி வைத்தது. ஆனால் பிரதமர் மோடி அந்த திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தினார்.

பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் பார்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் சொல்லியுள்ளார். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இந்த இடங்களை எல்லாம் ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களுக்காக பல திட்டங்களை முன்னெடுத்தவர்.

பிரதமர் மோடி தமிழர்களின் கலாசாரத்தை உலக அளவில் கொண்டு சென்றவர். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் முதல்-அமைச்சர் எந்த ஆதாரமும் இன்றி குறை சொல்வது ஏற்புடையது இல்லை. நெல்லையில் முதல்-அமைச்சர் திறந்து வைத்த ரூ.150 கோடி மதிப்பிலான மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

இதில் ரூ.100 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. மீதமுள்ள தொகைதான் மாநில அரசின் நிதி. மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு, மாநில அரசு தன் ‘ஸ்டிக்கரை’ ஒட்டும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. இந்த ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory