» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
வியாழன் 27, நவம்பர் 2025 11:28:07 AM (IST)

முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!
தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க்கொள்கையாக மதித்தவர்!
தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!
EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி: உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வியாழன் 27, நவம்பர் 2025 12:27:22 PM (IST)

செங்கோட்டையனை தவெகவிற்கு வரவேற்கிறேன்; வெற்றி நிச்சயம் : விஜய் பேச்சு!
வியாழன் 27, நவம்பர் 2025 11:45:14 AM (IST)

இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை!!
வியாழன் 27, நவம்பர் 2025 10:47:52 AM (IST)

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!
வியாழன் 27, நவம்பர் 2025 10:37:40 AM (IST)

தமிழகத்தில் அவசரகதியில் எஸ்ஐஆர் திட்டம்: விஜய்தரம்சிங் குற்றச்சாட்டு
வியாழன் 27, நவம்பர் 2025 10:15:06 AM (IST)

நீதித்துறையில் 50 ஆண்டு சேவை: முன்னாள் நீதிபதி ஜோதிமணிக்கு சென்னை பார் கவுன்சில் பாராட்டு!
வியாழன் 27, நவம்பர் 2025 7:55:54 AM (IST)


.gif)