» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி
வெள்ளி 21, நவம்பர் 2025 11:09:13 AM (IST)
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்; மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும்! ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்!
உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் இரண்டு அரசுகள் செயல்படக்கூடாது. அரசியலமைப்புக்கான நீதிபதிகள், அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டுமே தவிர, அதற்கு மேல் ஒருபோதும் செயல்படக்கூடாது.
மசோதாவை ரத்து செய்யவோ, பாக்கெட் வீட்டோவைப் போல (மசோதா சட்டமாக மாறுவதைத் தடுப்பது) பயன்படுத்தவோ ஆளுநருக்கு நான்காவது வழி இல்லை. அதேபோல வெறுமனே நிறுத்திவைக்கவும் அவருக்கு வழி இல்லை. ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காலவரையின்றி தொடர்ந்து தாமதப்படுத்த முடியாது. ஆளுநர் ஒரு மசோதாவை பரிசீலிப்பதற்கு காலத்தாமதம் செய்தால், நீதிமன்றத்தை அணுகி, ஆளுநர்கள் வேண்டுமென்றே செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த தடை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:27:41 PM (IST)

லஞ்ச வழக்கில் தீயணைப்புதுறை அதிகாரியை சிக்க வைக்க முயற்சி? போலீசார் விசாரணை
வெள்ளி 21, நவம்பர் 2025 11:35:35 AM (IST)

சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை : இன்ஸ்டா பிரபலம் உள்பட 6 பேர் கைது
வெள்ளி 21, நவம்பர் 2025 11:15:03 AM (IST)

சேலத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி விஜய் பிரசாரம்: காவல்துறை அனுமதி அளிப்பதில் சிக்கல்?
வெள்ளி 21, நவம்பர் 2025 8:13:03 AM (IST)

திருநெல்வேலியில் கூட்டுறவு வார விழா: ரூ.107.71 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கல்
வியாழன் 20, நவம்பர் 2025 5:54:26 PM (IST)

தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:00:12 PM (IST)


.gif)