» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி : தூத்துக்குடி கடல் பகுதியில் ரோந்து பணி தீவிரம்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 7:49:34 PM (IST)

டில்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் தமிழக கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியில் நேற்று மாலை காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக சுமார் 14 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்புபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள், அனல் மின் நிலையம், குலசேகரபட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், ஆகியவற்றில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கடலோர கால் பாதுகாப்பு படை குழுமம் சார்பில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகம் படும்படி ஏதும் படகுகள் கடலில் ஊடுருவல் இருக்கிறதா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர். 3 படகுகள் மூலம் வேம்பார் முதல் பெரியதாழை வரை 5 கடல் மைல் தொலைவிற்கு உட்பட கடல் பகுதியில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ரயில் சேவையில் மாற்றம் : முத்துநகர் எக்ஸ்பிரஸ் மணியாச்சியில் இருந்து இயக்கம்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:25:21 PM (IST)

நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:44:35 AM (IST)

வீட்டில் கருக்கலைப்பு செய்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு: கணவர் உள்பட 3 பேர் கைது
வெள்ளி 12, டிசம்பர் 2025 11:32:06 AM (IST)

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் உடன் கூட்டணி : த.வெ.க. கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:43:44 AM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 2027 முதல் செயல்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)


.gif)