» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை தொடங்கியது!

சனி 18, அக்டோபர் 2025 11:54:51 AM (IST)

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கில் சிபிஐ விசா​ரணையை தொடங்​கினர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதன்​பேரில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைக்​கப்​பட்​டது. 

கடந்த 5-ம் தேதி கரூர் வந்த இக்​குழு​வினர் சம்பவ இடத்தை பார்​வை​யிட்​டதுடன், மருத்​து​வம், மின்​வாரி​யம் உள்​ளிட்ட பல்​வேறு துறை அதி​காரி​களிடம் விசா​ரணை நடத்​தினர். மேலும், கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை​யும் 2 நாள் காவலில் எடுத்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 13-ம் தேதி உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்​து, ஐபிஎஸ் அதி​காரி பிர​வீன்​கு​மார் தலை​மை​யில் ஏடிஎஸ்பி முகேஷ்கு​மார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் அடங்​கிய சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் இரவு கரூர் வந்​தனர். கரூர் பொதுப்​பணித் துறை​யின் சுற்​றுலா மாளி​கை​யில் தங்​கி​யிருந்த அவர்​களிடம், சிறப்பு புல​னாய்​வுக் குழு ஏடிஎஸ்பி திரு​மால், வழக்கு ஆவணங்​களை ஒப்​படைத்​தார். இதை தொடர்ந்​து, பல்​வேறு துறை அரசு அலு​வலர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணையை தொடங்​கினர்.

சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர், கரூர் பொதுப்​பணித் துறைக்கு சொந்​த​மான நீர்வள ஆதா​ரத் துறை திட்ட இல்​லத்​தில் தங்​கி​யிருந்​து​தான் விசா​ரணை மேற்​கொண்டு வந்​தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்​றப்​பட்​டதை தொடர்ந்​து, புல​னாய்​வுக் குழு​வில் இருந்த அதி​காரி​களில் பெரும்​பாலானோர் புறப்​பட்​டுச் சென்ற நிலை​யில், ஒரு சிலர் மட்​டும் தங்​கி​யிருந்​தனர்.

இந்த அலு​வல​கத்​தின் தெற்கு பகு​தி​யில் 3 இடங்​களில் சில ஆவணங்​கள் தீயிட்டு எரிக்​கப்​பட்​டிருந்​தது நேற்று தெரிய​வந்​தது. மேலும், 32 ஜிபி கொள்​ளவு கொண்ட பென்​-டிரைவ் ஒன்​றும் சேதமடைந்து கிடந்​துள்​ளது. இதை செய்​தி​யாளர்​கள் வீடியோ, புகைப்​படம் எடுத்​ததை தொடர்ந்​து, சேதமடைந்த பென்​-டிரைவை சிறப்பு புல​னாய்​வுக் குழு​வினர் எடுத்​துச் சென்​றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory