» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சி தந்த பெருமாள் - திரளான பக்தர்கள் தரிசனம்!
சனி 11, அக்டோபர் 2025 11:04:27 AM (IST)

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புரட்டாசி மாதம் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். காக்கும் கடவுளான பெருமாளை புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்கினால் நாம் வேண்டுவதை அளித்து நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள் புரிவார் என்பது இந்துக்களில் நம்பிக்கை.
இதனால் பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி இன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 5 மணிக்கு கோ பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது.
இந்த மாதம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் சத்தியநாராயணா அலங்காரத்திலும், 2-வது சனிக்கிழமையில் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், 3-வது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதுபோல் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் 7 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
