» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:31:20 AM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய், சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இதில் கம்பிகள் பயன்படுத்தாமல் சிமெண்ட் கலவை மூலம் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையில் லாரி போன்ற வாகனங்கள் வரும் போது கால்வாய் சேதம் அடைய வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பெருமாள்புரம் பகுதியில் இதுபோன்று கம்பியில்லாமல் கட்டப்பட்ட கால்வாய் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனை 2ஆண்டுகளுக்கு மேலாகியும் மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற பணிகளால் மக்களின் வரிப்பணம் கோடிக் கணக்கில் வீணடிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் இப்பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
