» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டியில் நாளை முதல் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே தகவல்!
புதன் 8, அக்டோபர் 2025 11:59:56 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இதனிடையே வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து தற்போது கோவில்பட்டியிலும் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.
இந்தநிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . காலை 6.05 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 6.38 முதல் 6.40 வரை நின்று செல்லும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.23 முதல் 9.25 மணி வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி சிறப்பு ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தது: ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:29:48 PM (IST)

ராமதாஸ் காலத்தில் பாமகவுக்கு இப்படி ஒரு சோதனை : ஜி.கே.மணி வேதனை
செவ்வாய் 14, அக்டோபர் 2025 12:50:01 PM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது: கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:04:25 AM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 16-ம்தேதி தொடங்கும் : வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:01:38 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)
