» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி

புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? என்று பாஜக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கள்ளச் சாராயத்தால் பலியிடப்பட்ட உயிர்கள்: செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் - 22, கள்ளக்குறிச்சி - 65. 

இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது திமுக அரசு? 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (எ) கண்ணு குட்டி, கைது செய்யப்பட்டபோது, அவன் திமுக நிர்வாகியே இல்லை என்று கதை கட்டியது திமுக. இன்றோ திமுக கவுன்சிலரும் இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ் குமார் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காகக் கைதாகியுள்ளார். இதற்கு என்ன கதை கூறப் போகிறார்கள்?

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? இது போன்ற செயல்களில் ஈடுபட தான் திமுக கவுன்சிலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி தான் பொற்கால ஆட்சியா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory