» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)
ஆறுமுகநேரி அருகே ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகையை திருடிய வழக்கில் கைதான கிளீனர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். ஆரிப் அடிக்கடி சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் நகை பார்சலை முகைதீனுக்கு கொடுத்து அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் ஆரிப் கடந்த 8-ந் தேதி இரவில் 49 பவுன் நகைகள் அடங்கிய பையை சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து உடன்குடி செல்லும் ஆம்னி பஸ்சில் டிரைவராக இருந்த தட்டார்மடம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த நகையை பஸ் காயல்பட்டினம் சென்ற உடன் அபுதாகிர் என்பவரிடம் ஒப்படைக்குமாறு டிரைவரிடம் கூறியிருந்தார். இரவில் அந்த பஸ் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டது. மறுநாள் காலையில் ஆறுமுகநேரி அருகேயுள்ள சாகுபுரத்திற்கு வந்தபோது டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் சிவபாலன் நிறுத்தினார். அப்போது கிளீனர் மகேஷ், 49 பவுன் நகை பார்சல் இருந்த பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 பவுன் தங்க நகைகள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அவரை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)
