» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.09.2025) மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட /மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி (12-19 வயது வரை), கல்லூரி (15-35 வயது), பொதுமக்கள், (15-35 வயது) அரசு ஊழியர்கள் (வயது வரம்பு இல்லை) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பு இல்லை) என வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் 26.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, தடகளம், செஸ், கூடைப்பந்து, கபாடி, கால்பந்து, வாலிபால், சிலம்பம், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, பயிற்றுனர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)
