» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துணை ஆட்சியர்கள் பயணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

செவ்வாய் 9, செப்டம்பர் 2025 10:28:55 AM (IST)

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் துணை ஆட்சியர் நிலையில் பணி புரிந்து வந்த 17 பேருக்கு பணி நியமனம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் "புதுக்கோட்டை துணை ஆட்சியர் (பயிற்சி) கௌதம் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்படுகிறார். 

விருதுநகர் கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) ராமசுந்தரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் தூத்துக்குடி மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டார். 

கன்னியாகுமரி துணை ஆட்சியர் பயிற்சி மா. பிரியா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது போல் தமிழ்நாடு முழுவதும் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory