» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொடைக்கானலில் 6வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு

வியாழன் 31, ஜூலை 2025 3:51:35 PM (IST)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் சென்டர் சார்பாக 6-வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு  வெ.பரத் தலைமையில் நடைபெற்றது.

நீதிபதி சேகர், மாவட்ட கல்வி ஆய்வாளர் ஓய்வு அமுதா, நேச்சுரோபதி.  சுபிதா,  வைத்தியநாதன், லக்ட்சயா, எம்.ஐ.எம்.எஸ் இயக்குநர் க.சேதுசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மருத்துவர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார். எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புதிய புத்தகம் நீதிபதி சேகர் எம்.ஐ.எம்.எஸ், மாணவர்களின் சார்பாக  வெளியிட, எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மன் வெ.பரத் பெற்றுக்கொண்டார். நீதிபதி சேகர், அமுதா பொதுநல சேவையைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பின்னர் பரத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனமானது கடந்த 7 வருடங்களாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளித்தது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இம்யூனிட்டி பூஸ்டரும் வழங்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை சரியான பாதையில் எம்.ஐ.எம்.எஸ்  எடுத்து செல்கிறது. இந்த மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறையில் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம். 

பக்கவிளைவுகள் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் ஆராய்ச்சியோடு மட்டுமில்லாமல் முறையான அங்கீகாரம் கிடைத்தால் பல்வேறு மக்கள் பலனடையலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன்  கவனத்திற்கும் இந்த மருத்துவத்தை பற்றி எடுத்து கூறியிருக்கிறோம். விரைவாக இந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். முடிவில் யூசப் மௌலானா ஆம்புரோஸ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory