» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
வியாழன் 31, ஜூலை 2025 11:04:13 AM (IST)
தூத்துக்குடியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி செல்சினி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (37), இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகாலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மகாலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு விருப்பம் இல்லாததால் மகாலட்சுமி தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் மனு தள்ளுபடி!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 8:19:40 PM (IST)

சகோதரர்கள் 3 பேரை கொலை செய்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் : தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 7:55:59 PM (IST)

நடிகை மீரா மிதுனை கைது செய்ய வேண்டும்: மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:37:51 PM (IST)

தூத்துக்குடி அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டிஆர்பி ராஜா
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:15:17 PM (IST)

கங்கைகொண்டானில் பயோ எனர்ஜி எல்எல்பி நிறுவனம் : முதல்வர் துவக்கி வைத்தார்
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்: தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:43:18 PM (IST)
