» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு

ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து வாழ்கிறாராம். மேலும், இவர் வேலை செய்து வரும் திரேஸ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் 2 பவுன் தங்க மோதிரங்கள் திருடு போயினவாம். வீட்டின் பெண் உரிமையாளர், இவர் மீது சந்தேகப்பட்டு, வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், மீனாவை ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது அவர் லெக்கின்ஸை கழிவறை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory