» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனைத்து மாணவர்களும் கட்டாயமாக மேற்படிப்பு படிக்க நடவடிக்கை : ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 3:39:19 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களும் மேற்படிப்பு கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகத் தெரிவித்தார்.

அதன்படி ஆலோசனைகள் பெற்று பல்வேறு தொழிற்கல்வி தொடர்பான படிப்பில் (பொறியியல்/வழக்கறிஞர்/வேளாண்பொறியியல்/ மீன்வளம் /மருத்துவம் மற்றும் பல) சேர்ந்துள்ளனர். மேலும் கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பட்டபடிப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்களில், நாளது வரை எந்த மேற்படிபிலும் சேராதவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக படிப்பினை தொடரஇயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவர்களுக்கு ஆலோசனையும், தகுதியான மாணவர்களுக்கு நிதியுதவி, கல்விக்கட்டண உதவிதொகையும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கி கல்லூரிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2024 மற்றும் 2025 கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களை இல்லம் தேடி சென்று தொழிற்கல்வி தொடர்பான பட்டயபடிப்பு / பாலிடெக்னிக்/ தொழிற்பயிற்சி பள்ளிகளில் சேர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களும் மேற்படிப்பு கட்டாயமாக படிக்க வேண்டுமென்ற உன்னத நோக்குடனும், பொருளாதாரத்தை காரணமாக காட்டி படிக்க இயலவில்லை என்ற தடையை நீக்குவதற்காகவும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் உயர்வுக்கு படி திட்டம் கீழ் கனவு கட்டுப்பாட்டு அறை அனைத்து வேலைநாட்களிலும் கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான படிப்பு தொடர்பான ஆலோசனைகளை மற்றும் உதவிகளை நேரடியாக வந்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வினையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
