» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்த கன்றுக்குட்டி : தாய்ப்பசு பாசப் போராட்டம்!!
வெள்ளி 27, ஜூன் 2025 8:34:47 AM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடைக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்க பசுமாடு நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த வெள்ளநீர் ஓடையில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சேர்ந்து கடலுக்கு சென்று வருகிறது. நேற்று தூத்துக்குடி பண்டுகரை சாலை பகுதியில் உள்ள பக்கிள் ஓடைக்குள் ஒரு கன்றுகுட்டி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டது. அப்போது தண்ணீர் குறைந்த அளவே இருந்ததால் அந்த கன்று குட்டி அங்கும், இங்குமாக ஓடியது.
ஓடையில் இருந்து வெளியில் வருவதற்கு முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அந்த கன்று குட்டியின் தாய் பசு, ஓடையின் அருகே உள்ள பக்கவாட்டு சுவர் பகுதியில் கன்றுகுட்டி செல்லும் இடமெல்லாம் பயங்கர சத்தம் போட்டுக் கொண்டே சென்றது. நீண்ட நேரமாக கன்று குட்டியை மீட்க தாய் பசு பாசப்போராட்டம் நடத்தி வந்தது. இந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பக்கிள் ஓடைக்குள் சிக்கி தவித்த கன்றுகுட்டியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
