» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொறியியல் படிக்க முடியாதால் விரக்தி: மாணவி விஷம் குடித்து தற்கொலை!
சனி 7, ஜூன் 2025 8:58:20 AM (IST)
கயத்தாறு அருகே விரும்பிய மேல்படிப்பு படிக்க முடியாததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவாலப்பேரி கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணபதி. விவசாயியான இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2-வது மகள் சுதா (17). இவர் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு மேல்படிப்புக்காக காத்திருந்தார். சுதா பொறியியல் படிக்க ஆசைப்பட்டார்.
ஆனால் அவரது குடும்பத்தினர் ஏதாவது ஒரு டிகிரி படி என கூறியுள்ளனர். அவரது தோழிகள் பொறியியல் படிக்க விண்ணப்பித்திருந்தனர். இதனால் மனமுடைந்த சுதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டு மயங்கினார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏழைகளின் மருத்துவர்: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!
சனி 7, ஜூன் 2025 5:48:44 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)

ஓரணியில் தமிழ்நாடு என மக்களை திமுகவில் இணைத்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 7, ஜூன் 2025 4:35:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை : இந்து முன்னணி கோரிக்கை!
சனி 7, ஜூன் 2025 4:06:44 PM (IST)

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)
