» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொது இடங்களில் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம் : சிபிஎம் மேல்முறையீட்டுக்கு அனுமதி
வெள்ளி 6, ஜூன் 2025 10:19:35 AM (IST)
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை மாற்றியமைக்கவும், மார்க்சிஸ்ட் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு நேற்று விசாரித்தது.
மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில், இந்த வழக்கில் அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கில் தலைமைச் செயலர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசடி வழக்கில் ஈமு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை: ரூ.7.89 கோடி அபராதம்!
வெள்ளி 6, ஜூன் 2025 5:41:54 PM (IST)

சாதிய வன்கொடுமை: பெரியப்பா பழ.கருப்பையா மீது கரு.பழனியப்பன் போலீசில் புகார்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:21:40 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
வெள்ளி 6, ஜூன் 2025 4:07:01 PM (IST)

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்!
வெள்ளி 6, ஜூன் 2025 12:31:29 PM (IST)

நீட் மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 6, ஜூன் 2025 12:22:51 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 6, ஜூன் 2025 11:46:44 AM (IST)
