» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!

புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)



இந்தியாவுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசியுள்ளார் தங்கை கனிமொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது: ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!

இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

என்னது இதுFeb 3, 1749 - 08:30:00 PM | Posted IP 104.2*****

ஹீ ஹீ ஹீ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory