» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!

சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

நெல்லை பணகுடியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன்  தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாவட்டம், பணகுடி, பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பெண்மணி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் மூதாட்டியை தாக்கிவிட்டு, பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த மூதாட்டியிடம் இருந்து சுமார் 2 பவுன்  தங்கச் சங்கிலியை அந்த வாலிபர் பறித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்தார்.

இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவுப்படி, வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இருந்து மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட தங்க சங்கிலி மீட்கப்பட்டது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்குற்ற சம்பவத்தில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் டி.எஸ்.பி. மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory