» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

மானூர் அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியில் நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், வன்னிக்கோனேந்தல் பகுதியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையினர் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் மூலம் ஆயத்த ஆடை தயார் செய்வதற்காக அன்னை தெரசா, வெற்றிவேல் மற்றும் விநாயகா ஆகிய மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த தலா 10 குழு உறுப்பினர்கள் என 30 குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த உறுப்பினர்கள் மூலம் ஆயத்த ஆடைகள் தயார் செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ஒரு குழுவிற்கு ரூ.3 இலட்சம் வீதம் ரூ.9 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் ஆடைகள், துணிகளை தைப்பதற்கான நூல்கள் அனைத்தையும் அந்நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். ஆடைகளை தைத்து, அந்நிறுவனங்களுக்கு மீண்டும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆடைகளுக்கும் தைப்பதற்கான கூலித் தொகை அந்தந்த சுய உதவிக்குழுக்களுக்கு அந்நிறுவனங்கள் மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் அலகு மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர்களின் வாழ்வாதாரம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மானூர் வட்டம் வன்னிக்கோனேந்தல் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மின்னணு பயிர் கணக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் செல்வி ஸ்ரீலேகா, துணைத்தலைவர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளர் (மகளிர் திட்டம்) ரமேஷ், உதவி திட்ட அலுவலர் விக்டர் பெர்னாண்டோ, ஒன்றிய குழு உறுப்பினர் உடையம்மாள் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)

புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறி தம்பதியிடம் ரூ.8 லட்சம் பறிப்பு : 10 பேர் கும்பல் கைது
திங்கள் 5, மே 2025 11:32:45 AM (IST)
