» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)
நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:57:00 PM (IST)

டெல்லி குடியரசு தின விழா: தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:44:37 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைப்பதை சீமான் பிரதிபலிக்கிறார்: திருமாவளவன் பேச்சு
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:53:04 PM (IST)

திமுக தேர்தல் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 3:46:50 PM (IST)

வடமாநில இளைஞரை சிறுவர்கள் தாக்கிய வீடியோ... தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:14:42 PM (IST)

சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? - இபிஎஸ்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:19:28 AM (IST)



.gif)