» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)
நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்!
திங்கள் 30, மார்ச் 2026 1:10:05 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சோகம்: மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி; 2 பேர் படுகாயம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:31:02 AM (IST)

ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
திங்கள் 30, மார்ச் 2026 8:42:33 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000; ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகள்
ஞாயிறு 29, மார்ச் 2026 8:40:35 PM (IST)

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் களம் காணும் விஜய்: திமுக எம்.எல்.ஏ-க்களுடன் நேரடி மோதல்!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:32:48 PM (IST)

