» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை - செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 8:24:54 PM (IST)
நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வருகிற மே 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையிலிருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு தினசரி நான்கு முறை பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகளை மட்டும் கொண்டு இயக்கப்படும் இந்த ரயிலில் ஆயிரக்கணக் கானோர் பயணம் செய்வதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு சென்று திரும்புவோர் இதனால் கடும் அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேற்று இந்த ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மதுரையில் நடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் அவர் இது குறித்து வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ரயிலில் கூடுதலாக நான்கு பெட்டிகளை இணைக்க தென்னக ரயில்வே முதன்மை மேலாளர் (இயக்கம் ) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)
