» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு: தூத்துக்குடி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 12, மார்ச் 2025 5:14:30 PM (IST)

தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கனிமொழி எம்பி மனு அளித்தார்.
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்தம மனுவில், "எனது தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை-தூத்துக்குடி பிரிவு NH-38 (பழைய NH-45B) நான்கு வழிச் சாலையில் பல இடங்கள் சேத் அடைந்துள்ளன. மேலும் இது பொதுமக்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மதுரை-தூத்துக்குடி பிரிவு NH 38 இல், துரைசாமிபுரம், கீழ ஏரல், குருகுச்சாலை ஆகிய இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனை 2015-18 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
எனவே, பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல விபத்துகளையும் தவிர்க்கும். எனவே, மதுரை-தூத்துக்குடி NH-38 பிரிவில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!
புதன் 12, மார்ச் 2025 12:23:07 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை: அன்பில் மகேஸ் விளக்கம்
புதன் 12, மார்ச் 2025 10:44:32 AM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? - சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 4:14:25 PM (IST)
