» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை: அன்பில் மகேஸ் விளக்கம்
புதன் 12, மார்ச் 2025 10:44:32 AM (IST)
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவல்களை பரப்புவதால் உண்மைகள் மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை.
தமிழக அரசின் 2024 மார்ச் 15-ம் தேதியிட்ட கடிதமும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே மத்திய அரசின் திட்டங்களை ஏற்கிறோம். அதற்காக அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஏற்க முடியாது. அந்த கடிதத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டு அதன்பரிந்துரைகளின்படி திட்டத்தில் சேருவது குறித்து முடிவு செய்வோம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை திணித்து தமிழகத்தின் கலாச்சாரத்தையும், மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் தற்போது அரசியல் செய்கின்றனர். தமிழக குழந்தைகள் நலனுக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம் நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்துக்கும் சிறந்த சேவையை செய்கிறீர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
