» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)
பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு நேற்றிரவு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
சனி 21, மார்ச் 2026 5:06:31 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

ராமதாஸ் - சசிகலா புதிய கூட்டணி அறிவிப்பு: தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!
சனி 21, மார்ச் 2026 12:39:39 PM (IST)

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சனி 21, மார்ச் 2026 8:34:28 AM (IST)

