» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)
பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு நேற்றிரவு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
