» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)
பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு நேற்றிரவு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். சாப்பிட்ட பின்னர் உணவிற்கு பணம் கேட்ட நிலையில், அவர்கள் பணம் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உணவக உரிமையாளர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும், ஓட்டல் உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூன்று பேரும் ஒரே இரவில் வெவ்வேறு இடங்களில் மூன்று பேரை வெட்டி பணத்தைப் பறித்தது தெரியவந்துள்ளது. அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய இடங்களிலும் அரிவாளால் வெட்டி பணம் பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? - சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 4:14:25 PM (IST)

தமிழகத்தின் உரிமைகளுக்காக யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த எம்.பி.க்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செவ்வாய் 11, மார்ச் 2025 4:05:38 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:46:16 AM (IST)

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு: 11 ஆயிரம் தி.மு.க.வினர் மீது வழக்கு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:25:13 AM (IST)
