» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி, மானூர் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:23:25 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் மானூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் கூடத்தில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு மேற்கொண்டதோடு, அங்கு பணிபுரிபவர்களிடம் சமையல் செய்யும் இடம் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், அதே போன்று உணவின் தரம், சுவை குறித்து ஆய்வு செய்து, அலுவலர்கள் தொடர் ஆய்வு செய்ய வேண்டுமெனவும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு, வெள்ள நிவாரண நிதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.4 இலட்சம் செலவில் மானூர் ஊராட்சி ஒன்றியம் குப்பக்குறிச்சி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 பயனாளிகளின் வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பதிவேடுகள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வில், உதவி திட்ட அலுவலர் (ஊரக வேலைவாய்ப்பு) இசக்கியப்பன், மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீகாந்த், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? - சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 4:14:25 PM (IST)

தமிழகத்தின் உரிமைகளுக்காக யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த எம்.பி.க்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செவ்வாய் 11, மார்ச் 2025 4:05:38 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:46:16 AM (IST)

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு: 11 ஆயிரம் தி.மு.க.வினர் மீது வழக்கு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:25:13 AM (IST)
