» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசவில்லை; மக்களின் கவலைதான் வீசுகிறது : தமிழிசை பேட்டி
வெள்ளி 14, பிப்ரவரி 2025 10:14:58 AM (IST)
தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. தமிழகத்தில் ஸ்டாலின் அலை அல்ல, பொதுமக்கள் இடையே கவலைதான் வீசுகிறது என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழக அரசு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் பொதுமக்கள் இடையே கவலைதான் வீசுகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சாலைகள், பணி செய்யும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லை கவலையை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க பிரச்சினை தேர்தல் கமிஷனுக்கு சென்றுள்ளது. அதற்கும் பா.ஜ.க.தான் காரணம் என்று செல்வப்பெருந்தகை கூறுகிறார். யார் வீட்டிலாவது சமையல் நடைபெறவில்லை என்றால் அதற்கும் பா.ஜ.க.வின் சதி என்று கூறுவார். தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு 5 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். 5 டிகிரி காய்ச்சல்தான் உயர்ந்துள்ளது. அதற்கு தக்க மருந்து அளிக்கப்படும். அதன் மூலம் அந்த சதவீதம் குறைந்து கொண்டே வரும்.
தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. வேங்கைவயல் பிரச்சினையில் திருமாவளவன் உள்ளூர் காவல்துறையை நம்பவில்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என கூறுகிறார். பாலியல் பிரச்சினையிலும் உள்ளூர் காவல்துறை விசாரணையை ஏற்காமல் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் ஆட்சிக்கு எதிராக பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? - சிபிஐ விசாரிக்க அன்புமணி கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 4:14:25 PM (IST)

தமிழகத்தின் உரிமைகளுக்காக யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்த எம்.பி.க்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செவ்வாய் 11, மார்ச் 2025 4:05:38 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்க தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:46:16 AM (IST)

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு: 11 ஆயிரம் தி.மு.க.வினர் மீது வழக்கு
செவ்வாய் 11, மார்ச் 2025 11:25:13 AM (IST)
