» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்: சீமானுக்கு கனிமொழி பதிலடி!
வெள்ளி 10, ஜனவரி 2025 11:08:33 AM (IST)
பெரியார் குறித்து சீமான் சர்ச்சையான கருத்தை பேசி வரும் சூழலில், சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டினை முற்றுகையிட முயன்ற போது, அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபம் அருகே சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமல்லாமல் சீமானுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கு எதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
உருட்டு திராவிடம்Jan 11, 2025 - 06:36:12 PM | Posted IP 162.1*****
இளம் விதவை தலைவி
DhareashJan 10, 2025 - 09:09:13 PM | Posted IP 172.7*****
Dhareash Aagia Naan vanakam sollithan
DhareashJan 10, 2025 - 09:08:18 PM | Posted IP 172.7*****
Its a not using for this news for this generation
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

ஆமாJan 13, 2025 - 06:23:21 PM | Posted IP 162.1*****