» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: நெல்லையில் பரபரப்பு!

திங்கள் 21, அக்டோபர் 2024 5:41:52 PM (IST)

நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சந்திப்பு பகுதியில் பிரபல கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவ பரிசோதனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆணையர் உத்தரவின் பேரில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள அனைத்து தலங்களிலும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வெடிகுண்டு சம்பவம் தொடர்பான தகவல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் நோயாளிகள் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் அவர்களை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையின் பிரபல கண் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory