» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
சனி 5, அக்டோபர் 2024 5:53:21 PM (IST)
ரேஷன் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு: நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பிறகு, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க நவம்பா் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறிவிக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால் திமுகதான் : அமித் ஷா பேச்சு!
திங்கள் 5, ஜனவரி 2026 11:30:39 AM (IST)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 9.14 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்
திங்கள் 5, ஜனவரி 2026 10:57:45 AM (IST)

தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வினாடிகளும் விலை மதிப்பானவை: ரஜினி பேச்சு
திங்கள் 5, ஜனவரி 2026 10:21:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 8:40:14 PM (IST)

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 1:06:11 PM (IST)

அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல்: 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம்!
ஞாயிறு 4, ஜனவரி 2026 9:32:00 AM (IST)

