» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் செப். 14 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
சனி 7, செப்டம்பர் 2024 11:37:02 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 14 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024ஆம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை வருகிற 14 ஆம் தேதி வட்ட நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் 9 வட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், குடும்ப வழக்குகள் உள்ளிட்டவையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கிக் கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருநெல்வேலியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை இம் மாதம் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் சென்சார் விவகாரம்: உயர் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:20:31 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை : கனிமொழி எம்.பி. பேச்சு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:36:33 PM (IST)

இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை: அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவுரை
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 3:16:25 PM (IST)

திருச்செந்தூர் - நெல்லை இரட்டை ரயில் பாதை பணிகள்: போர்க்கால அடிப்படையில் தொடங்க கோரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:10:22 PM (IST)

திருக்குறள் முற்றோதுதல்: உலக சாதனை படைத்த இரண்டாம் வகுப்பு மாணவன்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:01:14 PM (IST)


வணக்கம் தமிழகம்Sep 12, 2024 - 03:42:41 PM | Posted IP 172.7*****