» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஐடிஐயில் பயின்று சான்றிதழ் பெறாதவர்கள் டிச.31-க்குள் பெறலாம்
சனி 7, செப்டம்பர் 2024 11:35:09 AM (IST)
ஐடிஐயில் பயின்று இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என பேட்டை ஐடிஐ துணை இயக்குநர் ஆர்.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 1960 முதல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழில் சான்றிதழ்கள் மற்றும் 2013 முதல் 2017 வரை பருவமுறை மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ளன. எனவே வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஐடிஐக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
நீண்ட காலமாக இச்சான்றிதழ்கள் உள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் அரசு ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது!
புதன் 19, மார்ச் 2025 5:26:54 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலையில் யாரும் தப்ப முடியாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதன் 19, மார்ச் 2025 4:34:05 PM (IST)

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)
