» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் நான் முதல்வன் திட்டத்தில் 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்!
வியாழன் 13, ஜூன் 2024 4:35:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்.நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி பகுதியை சேர்ந்த மாணவி.ஷர்மிலி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நன்றி தெரிவிக்கையில் எனது பெயர் ஷர்மிலி நான் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தேன். எனது குடும்பத்தின் வறுமை நிலையின் காரணமாக என்னால் உயர்கல்வி படிக்க முடியாது என்ற நிலையில் இருந்தேன்.
எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் நான் முதல்வன் திட்டம் குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். எந்த கல்லூரியில் எந்தெந்த துறையில் மேற்படிப்புபடித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும், அதற்கான செலவிற்கு வங்கிக்கடன் வழங்கப்படுவது குறித்தும், தெளிவாக எடுத்து கூறினார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக எனது உயர்கல்வி படிக்கும் கனவு நினைவாகுவதோடு, எனது குடும்பத்தையும் என்னால் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தினை கொண்டுவந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சனி 21, மார்ச் 2026 8:34:28 AM (IST)

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 8:20:18 PM (IST)

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)

