» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் நான் முதல்வன் திட்டத்தில் 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்!
வியாழன் 13, ஜூன் 2024 4:35:40 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 38,038 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்.நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி பகுதியை சேர்ந்த மாணவி.ஷர்மிலி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நன்றி தெரிவிக்கையில் எனது பெயர் ஷர்மிலி நான் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தேன். எனது குடும்பத்தின் வறுமை நிலையின் காரணமாக என்னால் உயர்கல்வி படிக்க முடியாது என்ற நிலையில் இருந்தேன்.
எனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் நான் முதல்வன் திட்டம் குறித்து என்னிடம் தெரிவித்தார்கள். எந்த கல்லூரியில் எந்தெந்த துறையில் மேற்படிப்புபடித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்தும், அதற்கான செலவிற்கு வங்கிக்கடன் வழங்கப்படுவது குறித்தும், தெளிவாக எடுத்து கூறினார்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக எனது உயர்கல்வி படிக்கும் கனவு நினைவாகுவதோடு, எனது குடும்பத்தையும் என்னால் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தினை கொண்டுவந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


