» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
சனி 18, மே 2024 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்:
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி கில்டன் (21). இவரது அம்மா கடந்த வருடம் இறந்து விட்டார். இவரது அண்ணன் 6 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அந்தோணி கில்டன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது: பொதுக்குழு தீர்மானம்!
சனி 17, மே 2025 12:26:41 PM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சனி 17, மே 2025 11:49:24 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)
