» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
சனி 18, மே 2024 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்:
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி கில்டன் (21). இவரது அம்மா கடந்த வருடம் இறந்து விட்டார். இவரது அண்ணன் 6 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அந்தோணி கில்டன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைவரும் ஜனநாயகத்தின் தூதுவர்களாக சென்று பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:44:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்? உத்தேச பட்டியல் வெளியானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:37:09 PM (IST)

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா குளிர்சாதனப் பெட்டி: இபிஎஸ் வாக்குறுதி!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:29:01 PM (IST)

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

பிரதமர் ஆற்றிய உரை உண்மைக்கு மாறானது: இந்தியக் கம்யூனிஸ்ட் கடும் குற்றச்சாட்டு!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:40:54 PM (IST)

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
செவ்வாய் 24, மார்ச் 2026 4:35:32 PM (IST)

