» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
சனி 18, மே 2024 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்:
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி கில்டன் (21). இவரது அம்மா கடந்த வருடம் இறந்து விட்டார். இவரது அண்ணன் 6 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அந்தோணி கில்டன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)
