» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
சனி 18, மே 2024 11:07:01 AM (IST)
தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்:
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் அந்தோணி கில்டன் (21). இவரது அம்மா கடந்த வருடம் இறந்து விட்டார். இவரது அண்ணன் 6 மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அந்தோணி கில்டன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெகடர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கந்த சஷ்டி விழா 2வது நாள் : வெள்ளி சப்பரத்தில் சுவாமி வீதியுலா
வியாழன் 23, அக்டோபர் 2025 8:26:08 PM (IST)

தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ரூ.157 கோடி: பாஜக வரவேற்பு!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:38:51 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம்: பைசன் படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)
