» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நெல்லை துணை ஆணையராக அனிதா நியமனம்!
சனி 27, ஜனவரி 2024 4:42:52 PM (IST)
தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், நெல்லை துணை ஆணையராக அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.
அதேநேரம், திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.
மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.
திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.
சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.
மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.
சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.
சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது: பொதுக்குழு தீர்மானம்!
சனி 17, மே 2025 12:26:41 PM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
சனி 17, மே 2025 11:49:24 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)
