» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!

புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)

விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்செந்தூர் இடையேயான இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை அவசரப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு இரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பாலக்காடு சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று வழக்கமான பாதைக்கு மாற்றாக மதுரை சந்திப்பு, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

இந்த மாற்றுப்பாதை இயக்கத்தின் போது திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய இரயில் நிலையங்களுக்கு இந்த இரயில் செல்லாது. அதற்குப் பதிலாக, மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்தச் சேவை மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory