» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பொதுமக்கள் முன்னிலையில் ஜெபமாலை வழிபாட்டுடன், வண்ணமயமான வானவேடிக்கை முழங்க அன்னை வேளாங்கண்ணி திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு ஜெபமாலை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன. மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் இத்திருவிழாவில், அனைத்துச் சமூக மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி சப்பர பவனியும், செப்டம்பர் 7-ஆம் தேதி சமபந்தி ஆசன விருந்தும் நடைபெறவுள்ளன.
சிகர நிகழ்ச்சியான ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலி, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பியம் மற்றும் பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


