» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்: குழந்தைத் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி!
சனி 8, ஆகஸ்ட் 2026 3:08:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாப்பிள்ளையூரணியில் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் "பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் க.க. நிவேதிதா சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வளரிளம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தடுக்கும் முறைகள், இணையவழி துன்புறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைக் தடுப்பதற்கான சட்டப் பிரிவுகள் குறித்து விரிவாகக் எடுத்துரைத்தார்.
மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு வழக்கறிஞர் ராம்ஜிபதி கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அதற்கு எதிரான சட்டப் பாதுகாப்பு உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, குழந்தைத் திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)



naadakaAug 9, 2026 - 09:48:52 PM | Posted IP 104.2*****