» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடைவிழா நாளை தொடக்கம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 10:45:08 AM (IST)
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக் கொடைவிழா நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் ஆடிக் கொடைவிழா, நாளை இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குவதைத் தொடர்ந்து இரவில் வில்லிசை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 7 மணிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணி மற்றும் இரவு 11 மணிக்குக் கும்பம் திருவீதி உலா நடைபெறும். மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
ஆகஸ்ட் 5 (புதன்கிழமை): காலை 8 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு அன்னதானம், பகல் 11:30 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்குச் சிறப்பு மகுடாட்டம் ஆகியவை நடைபெறும்.மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8:30 மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
விழாவையொட்டி நாளை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)



மக்கள்Aug 3, 2026 - 10:41:24 PM | Posted IP 104.2*****