» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுவனுடன் பழகி கர்ப்பமான 19 வயது இளம்பெண் மீது, சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்குத் திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கணவர் மற்றும் குடும்பத்தினர் குறித்துக் கேட்டபோது, அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடனடியாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட இளம்பெண், குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் விமானப் பணியாளருக்கான ஓராண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். அந்தப் பிரிவில் இவரும், களியக்காவிளையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரும் மட்டுமே படித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது வீட்டிற்குச் சென்று அந்த இளம்பெண் பழகி வந்ததாகவும், அதில் அவர் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. 8 மாத கர்ப்பமாக இருந்த நிலையிலும் இதனைப் பெற்றோரிடம் மறைத்துவிட்டுத் தனியாக மருத்துவமனைக்கு வந்தபோதுதான் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
இது குறித்துத் தகவலறிந்த சிறுவனின் தாயார், தங்கள் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தித் தனது மைனர் மகனைக் கட்டாயப்படுத்திச் தவறான பழக்கத்தில் ஈடுபடுத்தியதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவனைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக 19 வயது இளம்பெண் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)

கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

பொதுமக்களின் அலைக்கழிப்பிற்கு முற்றுப்புள்ளி : இல்லம் தேடிச் செல்லும் இலவச எப்ஐஆர் நகல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:02:53 AM (IST)


