» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சி சோதனையில் ரூ.7.49 லட்சம் ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!
வெள்ளி 3, ஜூலை 2026 7:27:38 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று நடத்திய அதிரடிச் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 7 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரொக்கம் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் பொறியியல் பிரிவில் நுழைந்து அதிரடிச் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனையின் போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திலகம் மற்றும் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோரின் அறைகளில் போலீசார் தீவிரமாகப் பரிசோதனை மேற்கொண்டனர்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூபாய் 7,49,900 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்ற நிலையில், தற்போதைய பணப் பறிமுதல் சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பொறியாளர்கள் திலகம் மற்றும் ராஜேஷ் கண்ணா ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)


