» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை!

வெள்ளி 3, ஜூலை 2026 4:59:24 PM (IST)

corpLanj.jpg

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து இந்த சோதனையைத் தொடங்கினர். குறிப்பாக, மாநகராட்சியின் பொறியியல் பிரிவு அலுவலகத்திற்குள் சென்ற போலீசார், உடனடியாக அதன் முக்கிய நுழைவு வாயிலைப் பூட்டி அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த திடீர் சோதனையின் காரணமாக மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. சோதனை நடக்கும் சமயத்தில் வெளிப்பணிகள் நிமித்தமாக மற்றும் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் வரி செலுத்த மனு அளிப்பதற்காக வந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். 

லஞ்சப் புகார் மற்றும் முறைகேடுகள் குறித்த ரகசியத் தகவலின் பேரில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வரலாற்றிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இங்கு சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory