» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
டிராக்டர் மோதி விபத்து: வாலிபர் பரிதாப மரணம்!
வியாழன் 2, ஜூலை 2026 4:28:06 PM (IST)
பழையகாயலில் டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த வாலிபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன் சுதர்சன் (18). இவர் கடந்த ஜூன் 29-ஆம் தேதி காலை பழைய காயல் பகுதியிலிருந்து தனது சொந்த ஊரான கணேஷ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக சுதர்சன் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுதர்சனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணுக்கனிம அரசாணை ரத்து: முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் கோரிக்கை!
வெள்ளி 3, ஜூலை 2026 10:44:23 AM (IST)

அனைத்து ரயில் நிலையங்களிலும் பாரத் டாக்ஸி சேவை : மத்திய அரசுக்கு கோரிக்கை
வியாழன் 2, ஜூலை 2026 7:52:29 AM (IST)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!
புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ரயில் நிலையங்கள் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 30, ஜூன் 2026 5:02:57 PM (IST)



கிப்சன்Jul 2, 2026 - 09:51:08 PM | Posted IP 162.1*****