» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)
கொட்டாரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
மாணவி சிவசந்தியா இன்று காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சிவசந்தியா மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அந்தப் பகுதிப் பொதுமக்கள், உடனடியாகப் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


