» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)
கொட்டாரம் அருகே சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதிய விபத்தில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசந்தியா (18). இவர் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து, அண்மையில் வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
மாணவி சிவசந்தியா இன்று காலை பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக சிவசந்தியா மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்த மாணவியை அந்தப் பகுதிப் பொதுமக்கள், உடனடியாகப் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி, சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)


