» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
எதையும் தாங்கும் இதயமே மீண்டு வா: இபிஎஸ் ஆதரவாக தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்கள்!
புதன் 13, மே 2026 9:00:17 AM (IST)

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிகழ்வு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத் தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களில், எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் "எதையும் தாங்கும் இதயமே! மீண்டும் வா..." என்ற வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளன. இது கட்சியின் தற்போதைய இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி மீண்டு வருவார் என்ற தொண்டர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் ஒரு தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், தொண்டர்கள் இன்னும் அவரது தலைமையையே உறுதியாக நம்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பழைய பேருந்து நிலையம், வி.வி.டி சிக்னல் மற்றும் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)



ஏம்பாமே 13, 2026 - 09:47:09 AM | Posted IP 104.2*****