» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து ஆட்சியர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் முக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 1, மே 2026 12:50:09 PM (IST)

தமிழகத்திற்குத் தனி ரயில்வே அமைச்சகம் தேவை : குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை
வெள்ளி 1, மே 2026 12:06:58 PM (IST)

குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமெரிக்க வாழ் சகோதரிகள் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை
வெள்ளி 1, மே 2026 8:53:57 AM (IST)

வெப்ப அலை : நண்பகல் 12 முதல் 3 மணி வரை தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி செய்யத் தடை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 5:33:54 PM (IST)



ராஜ்மே 2, 2026 - 07:22:53 PM | Posted IP 162.1*****