» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

சனி 2, மே 2026 5:03:13 PM (IST)



தூத்துக்குடியில் மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணும் பணி தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆலோசனை நடத்தினார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 2) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அலுவலர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து ஆட்சியர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் முக்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ராஜ்மே 2, 2026 - 07:22:53 PM | Posted IP 162.1*****

மே 06ம் தேதியா மே 4ம் தேதியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory