» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு தடை: அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!

சனி 21, மார்ச் 2026 11:26:43 AM (IST)

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு முட்டுக் கட்டையாக உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய 'தேர்தல் பயணக் கலந்துரையாடல்' விவாதம் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே நடைபெற்றது. இதில் திமுக சார்பில் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், அதிமுக சார்பில் வழக்கறிஞர் சேகர் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.

விவாதத்தில் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி தொகுதியில் ₹784 கோடி மதிப்பில் சாலைகள், கால்வாய்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முந்தைய அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், திமுக ஆட்சியில் முடுக்கிவிடப்பட்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு வெறும் 200 கோடி மட்டும் ஒதுக்கிய நிலையில், திமுக அரசு கூடுதல் நிதியுடன் 500 கோடி செலவில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.

மேம்பாலப் பணிகள் தாமதம் ஏன்? 

வி.வி.டி மேம்பாலப் பணி நீதிமன்ற வழக்கால் தாமதமாகிறது. இதற்கு மாற்றாக 4-வது கேட் பகுதியில் மேம்பாலமும், இதர பகுதிகளில் நடைபாதைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுக அரசு அறிவித்த 505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மீதமுள்ள 37 முக்கிய வாக்குறுதிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு முட்டுக் கட்டையாக உள்ளது. தமிழக நலனுக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் குரல் கொடுக்கவோ அல்லது போராடவோ அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வருவதில்லை என அமைச்சர் சாடினார்.

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை, டைடல் பார்க் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எனப் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஆன்மிக ரீதியாக 4,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதுடன், திருச்செந்தூர் கோயில் மேம்பாட்டுப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

விவாத மேடைகளில் பங்கேற்கப் பல அரசியல் தலைவர்கள் தயங்கிய நிலையில், துணிச்சலுடன் பங்கேற்று அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமளித்த அமைச்சர் கீதா ஜீவனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

ஆமாSep 4, 1774 - 06:30:00 AM | Posted IP 162.1*****

டாஸ்மாக் மட்டும் தடையில்லை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory